நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் ரீஜண்டாக துங்கு இஸ்மாயில் பதவியேற்கிறார்

ஜொகூர்பாரு:

ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் ஜொகூர் ரீஜண்டாக பதவியேற்கவுள்ளார்.

ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், அடுத்த வாரம் மாட்சிமை தங்கிய மாமன்னராக அரியணை ஏறவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்,  ஜொகூர் மாநில ரீஜண்டாக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழா காலை 10 மணிக்கு புக்கிட் செரீனின் அரண்மனையில் சுல்தான் இப்ராஹிமின் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில் மற்ற ஆட்சியாளர்களும் குடும்பத்தாரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹஃபிஸ் காஸி, ஜொகூர் ராயல் கோர்ட் வாரியத் தலைவர் அப்துல் ரஹீம் ரம்லி ஆகியோரும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுல்தான் இப்ராஹிம் வரும்  ஜனவரி 31ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் 17ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக அரியணை ஏறுகிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் பேரரசராக ஆட்சியில் இருப்பார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset