நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன்மலை நிலச்சரிவில் சிக்கியவர்களை  தேடும் பணி தொடர்கிறது

கேமரன்மலை:

கேமரன்மலை நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி  இன்று காலை மீண்டும் தொடங்கியது.

பகாங் மாநில தீயணைப்புப் படையின் துணை இயக்குநர் முஹம்மத் கெஷானி உறுதிப்படுத்தினார்.

கேமரன்மலை புளூவேலு கம்போங் ராஜாவில் நிலச் சரிவு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் மரணமடைந்த இருவரின் சடலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மேலும் 3 பேர் இந்த நிலச்சரிவில் புதையுண்டதாக நம்பப்படுகிறது.

இவர்களின் உடலை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் அந்த மீட்பு பணிகள் தொடங்கியது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset