நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம் மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்

கோலாலம்பூர்:

தாம் மீது வரும் திங்ட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் கூறினார். 

 எம்ஏசிசி  சட்டத்தின் 36(2) பிரிவின் கீழ் அவர் சொத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று வழக்கறிஞர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் எனது நாளை எதிர்பார்க்கிறேன் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை எம்ஏசிசி என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

கடந்த வாரம், அவரது மனைவி நைமா காலித், எம்ஏசிசியின் சொத்து அறிவிப்பு அறிவிப்பின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக நீதிமன்றத்தில் அதே சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset