செய்திகள் மலேசியா
பிப். 1க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் இல்லை: பிரதமர்
சிகாம்புட்:
வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பதவிக்கு நியமிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
பிப்ரவரி 1க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட எந்த அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்காது. அதே கொள்கை அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றார் பிரதமர்.
ஓய்வூதியம் இல்லாத நிரந்தரப் பணியிடங்களுக்கு அரசு ஊழியர்களை பணியமர்த்துவதற்கான புதிய கொள்கை நிலுவையில் உள்ளது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் புதிய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பொதுப்பணித்துறை சமீபத்தில் அறிவித்தது.
மலேசியா உட்பட பல நாடுகள் சில பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
இதனால் நிதி விவகாரங்களில் மாற்றம் தேவைப்படுகிறது.
எவ்வாறாயினும், அரசாங்கம் செய்ய விரும்பும் எந்தவொரு மாற்றமும் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் ஓய்வூதியங்களை ரத்து செய்வது உட்பட முன்மொழிவுகள், விவாதங்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும்.
அதன் பின்பே எந்த முடிவும் எடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
முன்னதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, புதிய அரசு ஊழியர்கள் இனி ஓய்வூதியம் பெற மாட்டார்கள். ஆனால் ஈபிஎப், சொக்சோ ஆகியவை செலுத்தப்படும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm