செய்திகள் மலேசியா
எச்ஆர்டி கோர்பின் தேசிய பயிற்சி வாரத்தில் 150,000 பேர் பங்கேற்பர்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்பின் தேசிய பயிற்சி வாரத்தில் 150,000 பேர் பங்கேற்பார்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
மலேசியர்கள் அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் எச்ஆர்டி கோர்ப் இந்த தேசிய பயிற்சி வாரத்தை நடத்தி வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டுக்காக இப் பயிற்சி வாரம் வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்தாண்டு 500,000 மணி நேர பயிற்சியின் வாயிலாக 130,000 பேர் பயன் பெற்றனர். 21,000 பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த வெற்றியை தொடர்ந்து இவ்வாண்டு 25,000 பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
இதில் 150,000 பேர் கலந்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை மனிதவள அமைச்சுக்கு உள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
எச்ஆர்டி கோர்ப்பில் தேசிய பயிற்சி வாரத்தின் அறிமுக விழா நேற்று தலைநகரில் நடைபெற்றது.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ ஷாகுல் ஹமீத் தாவூத் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
- பார்த்தின் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm