நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை; துன் ஆக இருப்பது மோசமானது: துன் மகாதீர்

புத்ராஜெயா:

நாட்டில் துன் ஆக இருப்பது மிகவும் மோசமானது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது சாடியுள்ளார்.

இந்திய சமூகத்தின் விசுவாசம் தொடர்பில் கேள்வி எழுப்பினேன் என போலீஸ் இன்று என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.

புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் இந்த விசாரணை நடைபெற்றது.

ஒட்டுமொத்தமாக 19 கேள்விகள் கேட்கப்பட்டன. பாதிக்கு மேல் நான் பதில் சொல்லவில்லை.

எஞ்சிய கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பதில் சொல்கிறேன் என தெரிவித்து விட்டேன்.

போலீசாரிடம் பேசுவதைவிட நீதிமன்றத்தில் பேசினால் மக்களுக்கு அது குறித்து விளக்கம் தரப்படும்.

மேலும், இந்த நாட்டில் நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என கூறுகிறோம்.

ஆனால் தொலைக்காட்சியில்கூட என் கருத்தை என்னால் பதிவு செய்ய முடியவில்லை என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset