நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களைக் காப்பாற்றுவோம் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்: காவல்துறை

கோலாலம்பூர்:

மக்களை காப்பாற்றுவோம் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அலாவூதின் அப்துல் மஜித் உறுதிப்படுத்தினார்.

அரண்மனையின் இரண்டாவது நுழைவாயிலில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மக்களைக் காப்பாற்றுவோம் என்ற பெயரில் இப் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி 2012 அமைதியான ஒன்றுக் கூடல் சட்டத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது.

அப் பேரணியின் ஏற்பாட்டாளர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

நேற்று காலை 11.30 மணிக்கு நிறைவடைந்த பேரணியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.

இதனிடையே இக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முஹம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset