செய்திகள் மலேசியா
சுங்கத் துறை பணியாளர்களுக்குக் கொடுப்பணவு வழங்கப்படும் : பிரதமர் அன்வார் உறுதி
புத்ராஜெயா:
கடந்த ஆண்டு முழுவதும் சுங்கத்துறையின் சிறந்த அடைவுநிலையைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு அவர்களுக்குக் கொடுப்பணவு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, வரி வசூல் நடவடிக்கையில் சுங்கத்துறையின் சிறப்பான பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இந்தக் கொடுப்பணவு வழங்கப்படும் என்றார்.
கணிசமான அளவு போதைப்பொருட்களை உள்ளடக்கிய கடத்தலை முறியடித்த சுங்கத் துறையின் பாராட்டுக்குரிய முயற்சிகளையும் தாம் கண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு வழங்கப்படும் கொடுப்பணவு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
2023-ஆம் ஆண்டில், சுங்கத் துறையானது 55.1 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.
சுங்கத் துறை பணியாளர்களுக்கான வீட்டு வசதியை மேம்படுத்துவதற்காக 50 மில்லியன் வெள்ளி அதிகப்படுத்துவதாகவும் அன்வார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm