செய்திகள் மலேசியா
பொருளாதார சுமை காரணமாக மக்கள் அவதி; இஸ்தானா நெகாராவில் மகஜர் சமர்ப்பிப்பு
கோலாலம்பூர்:
நாட்டின் பொருளாதார சுமை காரணமாக மலேசியர்கள் பெரும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். இதன் காரணமாக, நான்கு இஸ்லாமிய அரசு சாரா இயக்கங்கள் இணைந்து இஸ்தானா நெகாராவில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர்.
இந்த மகஜரானது இஸ்தானா நெகாரா பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 1000 பேர் இந்த அமைதி பேரணியில் கலந்துக்கொண்டு DAULAT TUANKU மற்றும் SELAMATKAN MALAYSIA என்று முழக்கங்களை எழுப்பினர்.
கூட்டத்தை சமாளிக்க சுமார் 50 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடப்பு அரசாங்கம் பொருளாதார சமூக விவகாரங்களில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.
ஒட்டுமொத்த மலாய்க்காரர்கள் சமூகமும் நடப்பு அரசாங்கத்தின் கொள்கைகள் நடவடிக்கைகளைக் கண்டு பெரும் அச்சம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது கலந்துக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm