நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்.ஏ.சி.சி விசாரணைகளில் வெளிப்படைதன்மை அவசியம்: புவாட் சர்காஷி 

பெட்டாலிங் ஜெயா: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளில் வெளிப்படைதன்மை அவசியம் என்றும் அது பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டார். 

ஒரு விசாரணையை மேற்கொள்வதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மிகுந்த ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

யாரை விசாரிக்கப்போகிறார்கள்; எந்த நோக்கத்திற்காக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியப்படுத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, அரசாங்க தலைமை செயலாளர் சூக்கி அலி விசாரிக்கப்பட்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இருப்பினும், இந்த தகவலை எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset