செய்திகள் மலேசியா
டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,525-ஆக உயர்வு
புத்ராஜெயா:
தொற்றுநோயியல் 2-ஆவது வாரம் (ME02)2024 ஆம் ஆண்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 3,525 ஆக அதிகரித்துள்ள நிலையில் முந்தைய வாரத்தில் 3,181 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.
இந்தக் காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சலால் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முந்தைய வாரத்தில் 130 ஹாட்ஸ்பாட் இடங்கள் பாதிவாகியிருந்தன.
ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது சிலாங்கூரில் 106, கோலாலம்பூர் புத்ராஜெயாவில் (17), பேராக்கில் (5) மற்றும் நெகிரி செம்பிலானில் (4) எனப் பதிவாகியுள்ளன.
மேலும், பினாங்கும் சபாவும் தலா இரண்டு இடங்களைக் கொண்டுள்ளன.
இதற்கிடையில், ஜிகா கண்காணிப்புக்காக, 50 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாகவும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm