நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: 1 எம்டிபி பணிக் குழு பரிசீலனை

கோலாலம்பூர்:

அனைத்துலக வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 1 எம்டிபி பணிக் குழு பரிசீலனை செய்து வருகிறது.

அப்பணிக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை உறுதிப்படுத்தினார்.

1எம்டிபி விவகாரத்தை வெளிப்படையாகக் கையாள்வதற்கும், அனைத்துத் தரப்பினரையும் பொறுப்பேற்கச் செய்வதற்கும் பணிக்குழு உறுதியுடன் உள்ளது.

குறிப்பாக ஒப்பந்தத்தின் சிக்கல்கள் கவனமாக ஆராயப்பட வேண்டும்.

மேலும் பணிக்குழு மலேசிய மக்களின் நலன்களுக்காக ஒரு நியாயமான தீர்வை உறுதி செய்யும்.

அதன் அடிப்படையில் நடைமுறையை கடைபிடிக்கத் தவறிய பலஅனைத்துலக வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பணிக்குழு பரிசீலித்து வருகிறது.

இது நிதி முறைகேடுக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset