நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு தைப்பூச விழாவில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்: ராயர்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு தைப்பூச விழாவில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்எஸ்என் ராயர் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் தைப்பூச விழா ஜனவரி 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மிகவும் விமரிசையாக இருக்கும்.

இவ்வாண்டு தைப்பூச விழா ஒற்றுமை தைப்பூச விழாவாக மாநிலத்தில் கொண்டாடப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் தங்க, வெள்ளி ரத ஊர்வலங்கள் ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செல்லவுள்ளன.

இரு ரதங்களும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கிட்டத்தட்ட ஒன்றாக நகரும்.

இரவு 11 மணிக்கு அவ்விரு ரதங்களும் ஆலயத்தை வந்தடையும் என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு ரத ஊர்வலத்தை முன்னிட்டு 150 தண்ணீர் பந்தல் அமைக்கப்படவுள்ளது.

மேலும் இந்த மூன்று தினங்களிலும் கிட்டத்தட்ட 10 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று ராயர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset