நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது மாடியில் இருந்து விழுந்த நைஜீரிய மாணவர் மரணம்

பத்து ஊபான்:

அடுக்குமாடி குடியிருப்பின் 16ஆவது மாடியில் இருந்து விழுந்த நைஜீரிய மாணவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் குளுகோர் பத்து ஊபானில் நிகழ்ந்தது.

பினாங்கு போலீஸ்படையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 37 வயதுடைய நபரின் இல்லத்தை சோதனையிடப்பட்டனர்.

அப்போது நைஜீரிய கல்லூரி மாணவர் ஒருவர் போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் மாலை 6 மணியளவில் நிகழ்ந்ததாக பினாங்கு வட மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமித் கூறினார்.

சோதனையின் போது அந்த நபர் முதலில் கதவைத் திறந்தார்.

ஆனால் போலீஸ் அதிகாரிகளை கண்டதும் விரைவாக கதவை  மூடிவிட்டார்.

இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே இருந்த ஒருவரை கைது செய்ய முயற்சித்தனர்.

அப்போது மாணவர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்தார்.

மேலும் அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபரையும் காண்டோமினியத்தின் எட்டாவது மாடியில் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset