நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புறநகர்களில் வாழும் மக்கள் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்ய பாரங்கள் வெளியிடப்படும்: ஜாஹிட்

ஷாஆலம்:

புறநகர்களில் வாழும் மக்கள் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்ய ஏதுவாக பாரங்கள் வெளியிடப்படும்.

இதனை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

பாடு எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கு மலேசியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்.

இந்நிலையில் புறநகர், கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள் இதில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக கூட்டரசு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு இதற்கான பாரங்களை வெளியிடும்.

இது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு இந்த முதனமை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளது என்று ஷாஆலாமில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பின் துணைப் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset