செய்திகள் மலேசியா
பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
பெட்டாலிங்ஜெயா:
பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலன் கொண்டனர் என்று ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஹரிநாராயணன் கூறினார்.
100 ஆண்டுகள் மிகவும் பாரம்பரியமிக்க பெட்டாலிங் எஸ்டேட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் எனது தலைமையிலான ஏழு பேர் அடங்கிய அறங்காவலர் குழு பராமரித்து வருகிறது. இவ்வாலயத்தின் திருப்பணிகள் சுமூகமாக நடந்து முடிந்தது.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவஸ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஆலயத்தில் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும். ஆகவே பக்தர்கள் இப்பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.
அதே வேளையில் ஆலய திருப்பணி, கும்பாபிஷேக விழா என அனைத்துக்கும் ஆதரவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலயம் சார்பில் நன்றி என்று டான்ஸ்ரீ ஹரி நாராயணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm