செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்று ஆலய தலைவர் தனுஜா கூறினார்.
ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம் 127 ஆண்டுகள் வரலாற்றை கொண்டதாகும். முன்னாள் தலைவர் விக்கி தலைமையில் இவ்வாலயத்தின் திருப்பணிகள் தொடங்கியது.
பல கட்ட சவால்களுக்கு மத்தியில் திப்பணிகள் பூர்த்தியாகி இன்று கும்பாபிஷேகமும் கண்டது.
கிரி குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
ஆலயத்தில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 9 மணிக்கு மேல் ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஆலயத்தில் மண்டல பூஜைகள் நடைபெறும்.
இப் பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு ஆலயத் தலைவர் தனுஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm