செய்திகள் மலேசியா
பொது சேவைத் துறையில் பதவி வகித்த முதல் பெண்மணி டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் காலமானார்
கோலாலம்பூர்:
மலேசிய பொது சேவைத் துறையில் பதவி வகித்த முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்த டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் நேற்று இரவு காலமானார்.
இதனை அவரின் பேரனும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான டத்தோ ரமணன் உறுதிப்படுத்தினார்.
100 வயதான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் நேற்று இரவு 8 மணிக்கு காலமானார்.
அவரின் இறுதி சடங்கு குறித்து குடும்பத்தினர் விவாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 1952ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பதவி வகித்ததன் வாயிலாக அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.
அதே வேளையில் மஇகாவின் மூத்த உறுப்பினருமான அவர் அதே ஆண்டு பங்சார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவர் மலாயா சுதந்திரக் கட்சியில் சேருமாறு டத்தோ ஒன் ஜாஃபரால் அழைக்கப்பட்டார்.
இந்த கூட்டணியில் போர்ட்டிக்சனில் பிறந்த அவர் 1959ஆம் ஆண்டு செந்தூல் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அப்போது அவர் தோல்வி கண்டார்.
கடந்த 1969ஆம் ஆண்டு கலவரம் நடந்த போது மெர்டேகா அரங்கத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ மையத்திற்கு அவர் தலைமையேற்றார்.
அப்போது அவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 3,500 பேர், வீடற்ற மக்களை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டார்.
கடந்த 1999ஆம் ஆண்டு குழந்தை பராமரிப்பு மசோதாவைத் திருத்தியதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
மேலும் கோலாலம்பூரில் கார் ஓட்டிய முதல் இந்தியப் பெண்மணியும் தேவகி ஆவார்.
இவர் கடன்த 1998ஆம் ஆண்டு மறைந்த பி. கிருஷ்ணனை மணந்தார்.
கடுமையான சவால்களுக்கு மத்தியில் இலங்கை, சிங்கப்பூர் தேர்தல்களில் இரண்டு பெண்கள் வெற்றி பெற்றனர்.
இதுவே பிறகு தாம் அரசியலுக்கு வர தூண்டியது என்று டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm