நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அன்னப்பூரணி திரைப்பட சர்ச்சை; மன்னிப்பு கோரினார் நடிகை  நயன்தாரா 

சென்னை: 

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் ஒடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். 

அன்னப்பூரணி திரைப்படத்தின் வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களைப் புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். 

இந்த படம் ஒடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது என்பது படக்குழுவினருக்கும் தமக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றவர்களின் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமக்கும் படக்குழுவினருக்கும் இல்லை என்று நடிகை நயன்தாரா திட்டவட்டமாக தெரிவித்தார். 

கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் தாம் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டார். 

அன்னப்பூரணி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று மத உணர்வுகளைத் தவறாக சித்தரிக்கும் வண்ணம் இடம்பெற்றிருந்ததாக கூறி ஒடிடி தளத்திலிருந்து அத்திரைப்படம் நீக்கம் செய்யப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset