நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணைப் பிரதமர் ஸாஹித் தலைமையில் ஒற்றுமை பொங்கல் விழா

ஷாஆலம் : 

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்ம்மத் ஸாஹித் ஹமிடியின் இந்தியச் சமூகநலத்திற்கான சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி ஏற்பாட்டில்  "ஒற்றுமை பொங்கல் விழா" 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடங்கி ஷாஆலம் டிஎஸ்ஆர் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் பொங்கல் விழாவில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி40 பிரிவைச் சார்ந்த 200 பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கைக்கணினிகள் (Tablet) வழங்கப்படவிருக்கின்றன. 

அதோடு பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட பரிசுகளும் தயார் செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அரவிந்த் அப்பளசாமி தெரிவித்தார்.

இதனிடையே ஒற்றுமை பொங்கல் விழாவைத் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அமாட் ஸாஹித் ஹமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார். 

இந்நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டத் தமிழ் கலை கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆகவே பொதுமக்கள் இந்த மாபெரும் பொங்கல் விழாவில் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டார்கள்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset