செய்திகள் கலைகள்
ஜெர்மன் விமான நிலையத்தில் பிரபல ஹாலிவூட் நடிகர் அர்னோல்ட் ஸ்வேஸ்நெகர் தடுத்து வைக்கப்பட்டார்
பெர்லின்:
ஜெர்மன் நாட்டின் மியூனிக் விமான நிலையத்தில் பிரபல ஹாலிவூட் ஆக்ஷன் நடிகர் அர்னோல்ட் ஸவேஸ்நெகர் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.
தமது விலையுயர்ந்த கைகடிகாரத்தை அவர் அதிகாரிகளிடம் பிரகடனம் செய்யாத நிலையில் சம்பந்தப்பட்ட விமான அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
அமெரிக்காவிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு வந்த அவர் விமான நிலைய சுங்கத்துறையின் அறையில் சில நிமிடங்களுக்கு தடுத்து வைக்கபட்டார்.
விலையுயர்ந்த கைகடிகாரத்தை பிரகடனம் செய்யாததாலும் இந்த பொருள் தொடர்பாக வரி ஏய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாலும் TERMINATOR திரைப்பட நடிகருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரின் விலையுயர்ந்த கைகடிகாரத்திற்கு முறையான விற்பனை வரியை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த விலையுயர்ந்த கடிகாரத்தை அர்னோல்ட் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.
இந்த விலையுயர்ந்த கைகடிகாரம் பிரபல சுவிஸ் கைகடிகார வடிவமைப்பாளர் AUDEMARS PIGUET ஆல் வடிவமைக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:48 pm
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
April 21, 2024, 9:47 am
தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
April 20, 2024, 2:24 pm
ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி
April 20, 2024, 11:12 am
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது
April 19, 2024, 5:29 pm
அமீர் கானுக்கு எதிரான DEEP FAKE தேர்தல் பிரச்சார வீடியோ: போலீஸார் வழக்கு
April 19, 2024, 1:22 pm
வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் நடிகர் விஜய்
April 19, 2024, 12:54 pm
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
April 19, 2024, 10:17 am
மக்களவை தேர்தல்; முதல் ஆளாக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்குமார்
April 18, 2024, 5:48 pm