செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் மகனிடம் எம்ஏசிசி வாக்குமூலம் பதிவு
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் மகனிடம் எம்ஏசிசி நேற்று வாக்குமூலம் பதிவு செய்ததை எம்ஏசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
அதிக மதிப்புகள் கொண்ட சொத்துகள் கொண்டிருப்பதை தொடர்ந்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சம்பந்தப்பட்டவர் வர்த்தகத்தில் கால்பதித்துள்ளார்.
தற்போது மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் அதிக சொத்துகளை கொண்டிருக்கும் வர்த்தகராகவும் அவர் உள்ளார்.
இதன் அடிப்படையில் அவரின் உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் பற்றிய அறிவிப்பு உட்பட பல விவகாரங்களில் வாக்குமூலத்ததை பெறுவதற்கான எம்ஏசிசி அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில் தனது சொத்துக்கள் அனைத்தையும், உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் எம்ஏசிசி கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm