நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 புதிய தரவு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்: அமைச்சர் கோபிந்த் சிங் 

புத்ராஜெயா:

இன்றைய இலக்கவியல், புதுமை மற்றும் தொழில்நுட்ப சகாப்தத்தின் தேவைகளுக்கு ஏற்ப, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் (சட்டம் 709) கீழ் தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனமான ஃபியூச்சரைஸ் உடன் இணைந்து வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும். 

சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்குவதுடன், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு போர்ட்டல் மூலம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மேலாண்மை செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க பிடிபி ஆணையம் மற்றும் ஃபியூச்சரைஸ் இணைந்து செயல்படும் என்று கோபிந்த் சிங் டியோ கூறினார்.

பிடிபி ஆணையாளர்களுக்கும் ஃபியூச்சரைஸ்க்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும்  நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset