நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் ராணுவ வீரர் மகன் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது:  போலீஸ் விசாரிக்க வேண்டும்

கோலாலம்பூர்:

முன்னாள் ராணுவ வீரர் மகன் மரணத்தில் உள்ள மர்மத்தை போலீஸ் துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.

ராஜேந்திரன் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவரின் மகன் யோகேந்திரன் கடந்தாண்டு நவம்பர் 22ஆம் தேதி கேமரன்மலையில் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

யோகேந்திரனில் உடலில் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கியதற்கான காயங்கள் உள்ளன.

இது சவபரிசோதனை அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக யோகோந்திரன் பயணித்த மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் கூட சேதமடையவில்லை.

இருந்தாலும் யோகேந்திரன் மரணத்தை விபத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

யோகேந்திரனின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என அவரின் குடும்பத்தினர் சந்தேகின்றனர். இது குறித்து அவரின் தந்தை போலீஸ் புகார் செய்தும் அதற்கும் நடவடிக்கை இல்லை.

ஆகவே இந்த விவகாரத்தில் ஐஜிபியும் துணை ஐஜிபியும் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset