நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று மாநிலங்களில் இன்னும் 278 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் ஆறு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 278 பேர் தங்கியுள்ளனர். 

இன்று காலை 6 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை.   

மொத்தம் 42 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் சபாவின் பெலூரான் மாவட்டத்திலுள்ள இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

மேலும், பகாங்கில் மொத்தம் 34 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் ரோம்பினிலுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ள நிலையில் ஜோகூரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 78 பேர் சிகாமாட், பத்து பாஹாட் பகுதிகளில் அமைந்துள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். 

இதற்கிடையில், ஜொகூர், பெர்லிஸ், சிலாங்கூர் மற்றும் திரெங்கானுவிலுள்ள பல ஆறுகள் இன்று காலை ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

கூடுதலாக, வெள்ளத்தால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 17 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சரவாக்கின் கூச்சிங்கில் உள்ள ற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் இன்னும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் நட்மா தெரிவித்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset