நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை திருத்தலத்தில் 133ஆவது தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலை திருத்தலத்தில் 133ஆவது தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறும் என்று ஸ்ரீ மகா மாரியம்மன தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பத்துமலையில் கடந்த 1891ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்று முதல் இன்று வரை பத்துமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.

அவ்வகையில்  இவ்வாண்டு தைப்பூச விழா வெள்ளி ரத ஊர்வலத்துடன் தொடங்கவுள்ளது,.

ஜனவரி 23ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெள்ளி ரதம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும்.

மறுநாள் ஜனவரி 24ஆம் தேதி மாலை வெள்ளி ரதம் பத்துமலையை வந்தடையும். மாலை 5.30 மணிக்கு சேவற்கொடி ஏற்றப்பட்டு தைப்பூச விசா அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

ஜனவரி 25ஆம் தேதி காலை 7 மணி முதல் சிறப்பு பூஜைகளுடன் தைப்பூச விழா தொடங்கும்.

அன்றைய தினம் அதிகமான பக்தர்கள் பத்துமலைக்கு வந்து நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.

அதோடு அரசாங்க பிரமுகர்களுடன் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் பல நிகழ்வுகள் பத்துமலையில் நடைபெறும்.

ஜனவரி 26ஆம் தேதி வெள்ளி ரதம் மீண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை நோக்கி புறப்படும் என்று அவர் கூறினார்.

தைப்பூச விழா ஜனவரி 25ஆம் தேதி என்றாலும் பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனை செலுத்த தொடங்கி விட்டனர்.

இதனால் பக்தர்களின் வசதிக்காக் அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.

குறிப்பாக அதிகமான போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளின் ஈடுப்படவுள்ளனர்.

இவ்வாண்டு பத்துமலைக்கு வருபவர்களும் நேர்த்தி கடனை செலுத்துபவர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் வாருங்கள்.

இது இந்த தைப்பூச விழாவை மேலும் சிறப்பூட்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset