நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் வழக்கறிஞர் குழுவின் கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்: பிரதமர்

காஜாங்:

மேன் ஆன் தி ரன் ஆவணப்படம் குறித்து நஜீப் வழக்கறிஞர் குழுவின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹின் இதனை தெரிவித்தார்.

மேன் ஆன் தி ரன் ஆவணப்படம் முன்னாள் பிரதமர் நஜிப்பின் 1 எம்டிபி விசாரணையில் அவரது வாதத்தை நியாயப்படுத்துவதாகவும், பாரபட்சமாக  உள்ளது.

ஆகையால் அந்த ஆவணப் படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நிறுத்த வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் குழு அரசாங்கத்திற்கும் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சிலுக்கும் கடிதம் எழுதியது.

இந்நிலையில் நஜீப்பின் வழக்கறிஞர் குழுவின் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இனி அவர்கள் தான் இந்த கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset