செய்திகள் மலேசியா
துபாய் நகர்வு திட்டம்: நால்வரிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு
பெட்டாலிங் ஜெயா:
அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில் செயல்படும் துபாய் நகர்வு திட்டம் குறித்து நான்கு பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பட்ருல் ஹிஷாம், ஆர்வலர் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸ், எழுத்தாளர் சலீம் இஸ்கந்தர் மற்றும் சமூக தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் (ஜே-கோம்) இஸ்மாயில் யூசோப் ஆகிய நால்வரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனைப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் முகமது ஷுஹைலி முகமது ஜெய்ன் உறுதிப்படுத்தினார்.
துபாய் நகர்வு திட்டம் குறித்து தமது தரப்புக்கு இதுவரை மொத்தம் 145 புகார்கள் கிடைத்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கிடைக்கப்பெறும் புகார்களைத் தொடர்ந்து சில அரசியல் கட்சித் தலைவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று தேசிய காவல்துறை தலைவர் இதற்கு முன் குறிப்பிட்டார்.
தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 (பி) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am