செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் உணவகங்களை இழிவுப்படுத்தி அவதூறு; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பிரெஸ்மா
கோலாலம்பூர்:
இந்திய முஸ்லிம் உணவகங்களை இழிவுப்படுத்தி டிக் டாக்கில் அவதூறாக பேசியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை தெரிவித்தார்.
நாட்டில் உணவகம் தொடர்பில் எந்த சர்ச்சைகள் எழுந்தாலும் அதை மாமாக் உணவகம் என பல இழிவுபடுத்துகின்றனர்.
இந்த மாமாக் உணவகம் என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என பிரெஸ்மா பல முறை கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது டிக் டாக்கில் ஒரு மலாய் பெண் இந்திய முஸ்லிம் உணவுகள் எதிராக கடுமையான அவதூறுகளை பரப்பி உள்ளார்.
ஆண்களின் உள்ளாடையை போட்டு பிரியாணி சமைக்கிறார்கள் உட்பட பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படையற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை.
இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அதை அப்பெண் உடனடியாக நிரூப்பிக்க வேண்டும்.
அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதை விடுத்து பொய்யான தகவலை அப்பெண் பரப்பக் கூடாது.
சம்பந்தப்பட்ட பெண் மீது பிரெஸ்மா போலீஸ் புகாபுகார் செய்துள்ளது. நாடு தழுவிய நிலையில் இப்புகார்கள் செய்யப்படும்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்கு தொடர்வது குறித்து பிரெஸ்மா வழக்கறிஞருடன் விவாதித்து வருகிறது.
அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நஷ்டஈடும் கோரப்படும். சம்பந்தப்பட்ட பெண் வீடியோவை நீக்கினாலும் வழக்கை நாங்கள் விட மாட்டோம்.
சம்பந்தப்பட்ட பெண் மீதான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am