நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆற்றிய பங்களிப்புக்காக டத்தோஸ்ரீ சரவணனுக்கு விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்

சென்னை: 

சமூக மேம்பாட்டில் தமிழர்களுக்கு உள்ள அக்கறையை உலகிற்கு உணர்த்தும் வகையில் சமூக மேம்பாட்டுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு கனியன் பூங்குன்றனார் விருது தமிழக முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 11 மற்றும் 12 நடைபெறும் இந்த விழாவில் மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அயல்நாடுகளில் வாழும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளன. 

முதல் நாளான்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ் இலக்கியம், கல்வி, சமூகமேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார். 

இரண்டு நாள் நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset