செய்திகள் மலேசியா
சீனப் புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் விமான, ரயில், பேருந்து சேவைகள்: போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு
புத்ராஜெயா:
அடுத்த மாதம் சீனப் புத்தாண்டை முன்னிட்டு விமானங்கள், ரயில் மற்றும் பேருந்துகளுக்கான கூடுதல் சேவைகளை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து சபா மற்றும் சரவாக் வரை பாத்தேக் ஏர் நிறுவனத்தை உள்ளடக்கிய கூடுதல் விமானங்கள், கோலாலம்பூரிலிருந்து ஈப்போ மற்றும் பாடாங் பெசார் வரை ரயில் பயணச் சேவைகளை வழங்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 6, 7 ஆம் தேதிகளில் கூடுதல் விமானங்களைச் சேவைகளை வழங்குவது குறித்த அரசாங்கத்தின் முன்மொழிவை பாத்தேக் ஏர் நிறுவனம் ஏற்றுக் கொண்டதில் தாம் மகிழ்ச்சிக் கொள்வதாகவும் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரிலிருந்து சிபு வரையிலான ஒருவழிப் பயணச் சேவைக்கு RM399 என்ற நிலையான விலைக் கட்டணத்தை வழங்குவதற்கும் பாத்தேக் ஏர் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தச் சிறப்புக் கட்டணம் பிப்ரவரி 6 முதல் 9-ஆம் தேதி வரையிலான எட்டு விமானங்களுக்குப் பொருந்தும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm