நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் மைஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மைஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மத்திய கிழக்கு முதலீட்டாளருடன் விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளரின் பெயரும் நிறுவனமும் குறிப்பிடப்படவில்லை.

அதே வேளையில் இந்த ஆண்டின் நடுப் பகுதியில் மைஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கவுள்ளது.

இதன் மூலம் மைஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் சிறப்பான முறையில் செயல்படும்.

குறிப்பாக பணியாளர்களின் சம்பளம், பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவது முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என அத்தகவல்கள் கூறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset