நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிவாரண மையங்களுக்கு உணவு தாமதமாக வந்தால் பொறுமையாக இருங்கள்: மாமன்னர்

பெக்கான்:

வெள்ள நிவாரண மையங்களுக்கு உணவு தாமதமாக வந்தால் பொறுமையாக இருங்கள். 

கோபப்பட வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் ரியாதுதீன் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் மக்களை மாமன்னர் சந்தித்து பேசினார்.

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவது தான் அரசாங்கத்தின் எண்ணமாகும்.

அரசாங்கம் முடிந்த வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்ததை தான் வழங்குகிறது.

ஒருவேளை வெள்ள நிவாரண மையங்களுக்கு உணவு தாமதமாக வந்தால் யாரும் கோபப்பட வேண்டாம்.

பொறுமையாக இருங்கள். நிச்சயம் உணவு வழங்கப்படும் என்று மாமன்னர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset