நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் சீரடைந்து வருகிறது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் சீரடைந்து வருகிறது. காலை மணி 8 வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4942 ஆக குறைந்துள்ளது. 

ஜொகூர் மாநிலத்தின் ஆறு மாவட்டத்தில் சுமார் 26 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருவதாக மாநில அரசாங்க  செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி கூறினார். 

கோத்தா திங்கி, ஜொகூர் பாரு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் குளுவாங், சிகாமாட், பத்து பஹாட் பொந்தியான் மாவட்டங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தலைவருமான அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் அதீத தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வானிலை தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset