செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் சீரடைந்து வருகிறது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் சீரடைந்து வருகிறது. காலை மணி 8 வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4942 ஆக குறைந்துள்ளது.
ஜொகூர் மாநிலத்தின் ஆறு மாவட்டத்தில் சுமார் 26 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருவதாக மாநில அரசாங்க செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி கூறினார்.
கோத்தா திங்கி, ஜொகூர் பாரு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் குளுவாங், சிகாமாட், பத்து பஹாட் பொந்தியான் மாவட்டங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தலைவருமான அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் அதீத தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வானிலை தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am