செய்திகள் மலேசியா
குறிப்பிட்ட நபர்களை மட்டும் எம்ஏசிசி குறிவைக்கிறது என நினைக்க வேண்டாம்: பிரதமர்
கோலாலம்பூர்:
நாட்டில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் எம்ஏசிசி குறிவைக்கிறது என யாரும் நினைத்துக் கொள்ள வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் ஊழலை ஒழிப்பது தான் ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. இதன் அடிப்படையில்தான் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது எம்ஏசிசி பலரிடம் விசாரணைகள மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக எம்ஏசிசி முன்னாள் தலைவர்களை மட்டும் குறிவைக்கவில்லை.
ஆனால், அந்தஸ்து, பதவியைப் பொருட்படுத்தாமல் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான ஆணையை மட்டுமே எம்ஏசிசி செயல்படுத்துகிறது.
விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் குற்றவாளி இல்லை என்றால் யாரும் கவலைப்படத் தேவையில்லை.
ஏனென்றால் விசாரணை கவனமாக நடத்தப்படுகிறது. வலுவான ஆதாரங்கள் இருந்தால் வழக்குத் தொடரப்படும்.
இதில் எவ்வளவு பெரிய சுறாக்களாக இருந்தாலும் விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am