நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்கா துபாய் விவகாரம் தொடர்பில் 43க்கும் மேற்பட்ட புகார்கள்

கோலாலம்பூர்:

லங்கா துபாய் விவகாரம் தொடர்பில் போலீசார் 43க்கும் மேற்பட்ட புகார்களை பெற்றுள்ளனர்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அலாவூடின் அப்துல் மஜிட் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் லங்கா துபாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சேகுபார்ட் என்று அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், பாபாகோமோஎன்று நம்பப்படும் வான் அஸ்ரி வான் டெரிஸ் மற்றும் சலீம் இஸ்கந்தர் ஆகியோரை தங்கள் வாக்குமூலங்களை வழங்க அழைக்கப்படுவார்கள் என ஐஜிபி கூறியிருந்தார்.

விசாரணைக்கு உதவ மூவரும் விரைவில் அழைக்கப்படுவார்கள்.

ஜனவரி 9 ஆம் தேதி வரை, லங்கா துபாய் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் நாடு முழுவதும் மொத்தம் 43 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset