நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளிருப்பு கற்றல் கற்பித்தல் நடைமுறை பினாங்கு மாநிலத்தில் நீடிக்கப்படாது 

ஜோர்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் பெரும் நீர் விநியோக தடை காரணமாக பள்ளிகளுக்குத் தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டது. 

மேலும், PDPR அல்லது உள்ளிருப்பு கற்றல் கற்பித்தல் நடைமுறை நேற்று தொடங்கிய அது நீடிக்கப்படாது என்று மாநில கல்வித்துறை துணை இயக்குநர் வான் சஜிரி வான் ஹசான் கூறினார். 

பினாங்கு மாநிலத்தில் நீர் விரியோகம் கட்டங்கட்டமாக வழக்கத்திற்கு வந்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த PDPR நடைமுறை நாளை வரை மட்டுமே தொடரப்படும் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, படிவம் 5 மற்றும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பள்ளிகள் PRA-U தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் உள்ளிருப்பு கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார். 

பினாங்கு மாநிலத்தில் கடுமையான நீர் விநியோக தடையால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset