நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், பகாங்கில் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

ஜொகூர்பாரு:

ஜொகூர், பகாங் ஆகிய இரு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு எண்ணிகை மேலும் அதிகரித்துள்ளது.

கனமழையை தொடர்ந்து ஜொகூர், பகாங் மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்விரு மாநிலங்களில் இன்று காலை வரை  9,146 பேர் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

நேற்று இரவு இந்த பாதிப்பு எண்ணிக்கை 8,586ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 76 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

ஜொகூர் மாநிலத்தில் மட்டும் 7,536 பேர்  பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

கோத்தா திங்கியில் ஆக அதிகமாக 4,448 பேர் 26 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

ஜொகூர்பாருவில் 1,710, குளுவாங்கில் 1,163, சிகாமட்டில் 103 பேர், கூலாயில் 90, பொந்தியானில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் மொத்தம் 1,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset