நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கவலையளிக்கிறது

கோலாலம்பூர்: 

நாட்டில் குழந்தைகள், சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சரான டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார். 

2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சுமார் 6990 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 2023ஆம் ஆண்டு மட்டும் 1570 சம்பவங்கள் பதிவானது. 

அதிகமானோர் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார். 

அதிகப்படியான பாலியல் குற்றங்கள் அறிமுகமான நபராலேயே அரங்கேறுவதாக அரச மலேசிய காவல்துறையின் அறிக்கையை மேற்கொள்காட்டி டத்தோஶ்ரீ அஸாலின் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset