நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள்  பாடு தளத்தில் பதிந்துக்கொண்டுள்ளர்: ரஃபிசி ரம்லி 

கோலாலம்பூர்: 

பத்து லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் PADU முதன்மை தரவு தளத்தில் பதிந்துக்கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார். 

மேலும், 18 வயதிற்குக் கீழ் உள்ள மாணவர்கள், இளைஞர்களும் இந்த பாடு தரவு தளத்தில் பதிந்துள்ளது என்பது இளைஞர்கள் இதன் முக்கியத்துவத்தை நன்கு அறித்து வைத்துள்ளதைக் காட்டுவதாக உள்ளது என்று அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

பாடு திட்டத்தின் வாயிலாக மக்களின் உண்மையான தரவுகள், அவர்களுக்கான உதவிகள் சென்று சேர்வதை மடானி அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்று அவர் கருத்துரைத்தார். 

முன்னதாக, கடந்த வாரம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் PADU முதன்மை தரவு தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். மலேசியர்களின் விபரங்கள் யாவும் இந்த PADU வின் கீழ் செயலாக்கம் காணும் என்று அன்வார் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset