நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உறுதிமொழி விழாவிற்குப்பின் மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி குனேஸ்ராவ் மரணமடைந்தார்

ஜார்ஜ் டவுன்:

உறுதி மொழி எடுக்கும் விழாவிற்கு பின் மயங்கி விழுந்த போலீஸ் அதிகாரி குனேஸ்ராவ் மரணமடைந்தார்.

இதனை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் உறுதிப்படுத்தினார்.

35 வயதான குனேஸ்ராவ் பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் டி9 எனப்படும் தீவிர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாவார்.

 இவர் இன்று மாநில குற்றப் புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள், ஊழல் உறுதிமொழி வாசிப்பு விழாவில் பங்கேற்றார்.

அந்நிகழ்வுக்கு பின் அவர் கழிப்பறையில் மயங்கி கிடக்க காணப்பட்டார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு குனேஸ்ராவ் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. மாரடைப்பால் அவர் மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மரணமடைந்த குனேஸ்ராவ் தனது கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் கொண்ட அதிகாரி என்று அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset