நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்கா துபாய் குறித்து பிரதமரின் சிறப்பு அதிகாரி போலீசில் புகார்

கோலாலம்பூர்:

லங்கா துபாய் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி ஷம்சூல் இஸ்கண்டார் போலீசில் புகார் செய்தார்.

பொதுமக்களின் அமைதியின்மையை ஏற்படுத்தும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த புகார் செய்யப்பட்டதாக ஷம்சூல் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இந்த லங்கா துபாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக பதிவாளர் ராஜா பெட்ரா கமாருடின் சமீபத்தில் வெளிப்படுத்தியிருப்பது, வீண் என்று தெரிந்தும் அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு தீவிர இயக்கம் இருப்பதை நிரூபிப்பதாக அவர் கூறினார்.

லங்கா துபாய்  என்பது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை அச்சுறுத்துவதாகும்.

மேலும் சட்டவிரோத கட்சித் தாவல் சட்டத் திட்டத்திற்கு எதிரானதாகும்.

ஆகவே இந்த விவகாரத்தை போலீஸ் விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஷம்சூல் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset