நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்குர்ஆன் பயன்பாடு குறித்து ஜாக்கிம் அமைப்பிடம் கருத்து பெறுவேன்: பிரதமர் அன்வார் திட்டவட்டம் 

கோலாலம்பூர்: 

தமது உரையில் அல்குர்ஆன் வசனங்கள் இடம்பெறும் என்பதைத் தெரிவித்த பிரதமர் இதன் தொடர்பாக ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய சமய மேம்பாட்டு இலாகாவின் கருத்து பெறுவேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இதனால் எதிர்காலத்தில் அல்குர்ஆன் வசனங்களை மேற்கொள்காட்டி உரையாற்றும் போது எந்தவொரு சிக்கலும் ஏற்படாமல் இருப்பதை இது உறுதிப்படுத்தும் என்று அன்வார் சொன்னார். 

இதுபோல் மற்ற மாநிலங்களிலும் அல்குர்ஆன் தொடர்பான விஷயங்களைப் பேசுவது என்பது என்னை பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கருத்துரைத்தார். 

இதனிடையே, தாம் கூறிய அஷாபுல் காஹ்ஃபி கதையானது சில தரப்பினரால் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாகவும் அன்வார் சுட்டிக்காட்டினார். 

முன்னதாக, பிரதமர் துறை ஊழியர்களுடன் மாதாந்திர சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் அன்வார் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset