நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் தற்காலிகமாக மூடப்படுகிறது

மாரான்: 

பஹாங் மாரானில் அமைந்திருக்கும் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் யாவும் வெள்ளம் சூழ்ந்தது. 

இதனால், இன்று ஜனவரி 8ஆம் தேதி 2024ஆம் ஆண்டு திங்கட்கிழமை தொடங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆலயம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று ஆலய நிர்வாகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. 

மாரானில் கடுமையான வெள்ளம் காரணமாக ஆலயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலய வளாகத்தினுள் வெள்ள நீர் புகுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகம் விளக்கம் அளித்தது. 

மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதை ஆலய நிர்வாகம் தமது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக தெரிவித்துக்கொண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset