செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருவதாக மாநில பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு தெரிவித்தது.
1,819 குடும்பங்களைச் சேர்ந்த 6564 பேர் வெள்ளம் காரணமாக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவை காட்டிலும் இன்று காலை 8 மணிக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோத்தா திங்கி, குளுவாங், ஜொகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் உள்ள வெள்ள நிவாரண மையங்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநில வெள்ள நிர்வாக செயற்குழுவின் நிர்வாகி டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
கோத்தா திங்கியில் அதிகளவில் வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2964 பேர் இங்கு பாதிக்கப்பட்ட வேளையில் குளுவாங்கி 1633 பேரும் ஜொகூர் பாருவில் 1844 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm