செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஆடவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரான டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரியின் மந்திரி பெசாருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்த மூவரைக் காவல்துறையினர் இன்று விடுவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டதாக ஷா ஆலாம் போலீஸ் படை தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
காவல்துறை தரப்பில் சம்பந்தப்பட்ட மூவருக்கு எதிராக தடுப்பு வைப்பு நடவடிக்கை கோரிக்கை விடுக்கப்பட்டும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் கருத்துரைத்தார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 31 முதல் 35 வயதிற்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இரு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர். இந்த உத்தரவை மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வழங்கியது.
மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் பின்புறத்தில் இருந்து அத்துமீறி நுழைந்ததாக அமிருடினின் உதவியாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm