செய்திகள் மலேசியா
7 மாநிலங்களில் 21 இயற்கை பேரிடர் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன
புத்ராஜெயா:
நவம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஏழு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட 21 பேரிடர் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புகார்களில் எட்டு மாநில சாலைகள், 13 மத்திய சாலைகள் சம்பந்தப்பட்டதாக பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி தரவுகள் துல்லியமாக இருப்பதாக அவர் கூறினார்.
ஜொகூர், பகாங், கிளந்தான், பேரா, திரெங்கானு, கெடா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் இது கண்டறியப்பட்டது.
இதில் பத்து புகார்கள் நிலச்சரிவு, நான்கு புகார்கள் வெள்ளம், மேலும் நான்கு புகார்கள் சாலை இடிந்து விழுந்தது.
மேலும் மூன்று புகார்கள் பாலங்கள் சேதமடைந்த அல்லது இடிந்து விழுந்தது என்று குவா மூசாங்கில் சேதமடைந்த சாலையைப் பார்வையிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm