நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய அரசாங்கத்தை அமைக்க 118 எம்பிக்கள் எஸ்டியில் கையெழுத்திட்டது போலியானது

கோலாலம்பூர்:

118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க  எஸ்டியில் கையெழுத்திட்டனர் என்பது போலியான தகவல்.

எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சாவின் அலுவலகம் இதை உறுதி செய்தது.

புதிய அரசாங்கத்தை அமைக்க 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்டியில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த எஸ்டியுடன் எதிர்கட்சித் தலைவர் விரைவில் மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு 120  பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியது.

இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. 118 எம்பிக்களின் எஸ்டியில் கையெழுத்திட்டதிலும் உண்மை இல்லை என்று அவ்வலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset