செய்திகள் மலேசியா
ரவாங்கில் அதிரடி சோதனை: 100க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினர் கைது
ரவாங்:
ரவாங்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 100க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநர் ஜெப்ரி எம்போக் தாஹா கூறினார்.
நாட்டில் சட்டவிரோத அந்நிய நாட்டினரை முறியடிக்கும் நோக்கில் அதிரடி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் ரவாங் ஸ்ரீ செம்பகா அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர்.
கிட்டத்தட்ட 468 அந்நிய நாட்டினரிடம் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு குற்றங்களில் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 6 மாத குழந்தையும் அடங்கும்.
மைதானவர்களில் வங்காளதேசம், மியன்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm