நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியிலிருந்து அறிவிப்பாளர்கள் சுரேஷ், அஹிலா விடைபெற்றுக்கொண்டனர் 

கோலாலம்பூர்: 

மலேசியாவின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ், அஹிலா விடைபெற்றுக்கொண்டனர். 

இந்த தகவலை ராகா வானொலியின் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி அவர்கள் இருவரும் இணைந்து கலக்கல் காலை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர். 

இந்நிலையில், வானொலி அறிவிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் அஹிலாவிற்கு மனமார்ந்த ராகா வானொலி நிலையம் நன்றி தெரிவித்துக்கொண்டது. 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி புத்தம் புதிய பொலிவுடன் கலக்கல் காலை நிகழ்ச்சியைப் புதிய அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset